Tuesday, May 15, 2007

அறிவே ஆயுதம்

குரங்கிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்த காலக்கட்டம், மிகச் சுவையானது. ஒவ்வொன்றிலும் பட்டுப் பட்டுத்தான் மனிதன் கற்றுக்கொண்டான். அந்த அனுபவங்கள்தான் அவனது இன்றைய வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் மறைமுகக் காரணங்கள்.

அந்த வகையில் நம் தற்போதைய அனுபவங்கள், நம்மோடு போய்விடக் கூடாது. அவை இன்றுள்ளவர்களுக்கும் எதிர்வரும் தலைமுறைகளுக்கும் பயன்பட வேண்டும். அந்த வகையில் பயனுள்ள அனுபவங்கள், திட்டங்கள், புதிய யோசனைகள், சிந்தனைகள் பலவற்றையும் தொகுக்கும் ஒரு முயற்சியே இந்த வலைப் பதிவு.

வரலாற்றிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் திரைப்படங்களிலிருந்தும் நம் சம கால மனிதர்களிடமிருந்தும் நம் சொந்த எண்ணங்களிலிருந்தும் சூரியனுக்குக் கீழுள்ள அனைத்திடமிருந்தும் நாம் பெற்ற, பெறும் நல்ல யோசனைகளை இங்கு தொகுத்து வைப்போம்.

சவால்களும் சோதனைகளும் நேரும்போது அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை இவை நமக்கு எடுத்துரைக்கும். தவறுகளிலிருந்து பாடங்கள் கற்றவர்களும் கற்காதவர்களும் அதனைப் பகிர்ந்துகொண்டால், இதர மனிதர்களுக்கு அது ஒரு சிறந்த பாடமாக இருக்கும்.

இதனை ஒரு கூட்டு வலைப் பதிவாகவும் கொண்டு செல்லலாம். விருப்பமுள்ள நண்பர்கள், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.